...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 23, 2006

பிடிக்கவில்லை...

நீ தற்கொலை செய்து கொண்டாய்
என அறிந்து பதற்றதுடன் அங்கு வந்தேன்
அங்கே நம் நண்பர்கள் அழுது கொண்டு இருந்தார்கள்
பிரம்மை பிடித்தது போல் நான் உன்னையே
பார்த்து கொண்டிருந்தேன்...என்ன ஆயிற்று
இவனுக்கு....என்னால் நம்ப முடியவில்லை..
தடுமாறி நான் அருகில் இருந்த நாற்காலியில் விழுந்தேன்
அங்கே...reading deskல் உன் எழுத்துகளை
பார்த்த எனக்கு அதிர்ச்சி.. நீ என்னை காதலித்தாயா?

அந்த roomயை விட்டு வெளியில் வந்தபோது..
நண்பர்கள் அதை பற்றி தான் பேசி கொண்டிருந்தார்கள்
.....உன்னை அவன் காதலித்தான்..நாங்க அவன்கிட்ட..
எத்தனையோ தடவை சொல்லிடுடா..தள்ளி போடாதனு..
சொல்லி இருக்கோம்...ஆனா அவன்...
இல்லடா தைரியம் வரமாட்டேங்குது..
நான் சொல்லி அவள் மறுத்துவிட்டால்..என்னால்
தாங்கிக்க முடியாது..அதவிட நான் மனசுக்குள்ளயே
வைச்சி காலமெல்லாம் காதலிச்சுகிட்டே
இருந்திடுவேன்னு சொல்லிகிட்டேயிருப்பான்..

இந்த நேரத்துல அவனுக்கு மேலபடிக்க சீட்டு கிடைக்க
அவன் U.S...போயிட்டான்..
திரும்பி வந்து நான் தான் சொல்லுவேன்
என்று promise வாங்கிகிட்டான்..
இதுக்குள்ள sudden ஆக
உனக்கு marriage fix..ஆயிட்டது...
உன் கல்யாணத்துக்காக திரும்பி வந்தவன்..
இப்போ...இப்படி பண்ணிப்பானு
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...
sorryda..நாங்கலாவது உன்கிட்ட இதபத்தி முன்னாடியே..
அவன் பேச்ச கேக்காம...சொல்லி இருக்கனும்..

இப்போ பார்..
ஐயோ...என்று மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டார்கள்..
நான் அவர்களையே பார்த்து நின்று கொண்டிருந்தேன்..
உன்னால எப்படி இப்படி அழாம
இருக்க முடியுது என்று கேட்டார்கள்..
அவன் எடுத்த... இந்த பைத்தியகார முடிவுக்கு
நான் எதுக்கு அழனும் அவன் எந்த அளவுக்கு
உன்னை நேசிச்சானு தெரிந்தா நீ இப்படி பேசமாட்ட...
எனக்கு தெரிய தேவையில்லை...
அவன் நம்ப friendda... அதுவும் உனக்கு எவ்லோ close...
என்ன ஆச்சு உனக்கு....
i'm fine...he was my friend..but not now.

நீ...என்ன சொல்ற...
எனக்கு அவன் நண்பன் இல்லனு சொல்றேன்...
நீ கல்யாணத்துக்கு பிறகு சுத்தமா மாறிபோயிருக்கு..
இல்ல நான் மாறல அப்படியே தான் இருக்கேன்..
பின்னே ....ஏன் இப்படி..
எப்படி... அழாம இப்படி..
அதான் முன்னாடியே...அவன் சரியான..looseனு..சொல்லிட்டேனே...
ஆமா... அவன் loose... தான்...
உன்னை போய் love... பண்ணான் பார் அவன்... loose... தான்..
சே....ஏன்டா..ஏன்..இப்படி...
புருஷன்..வந்திட்டா..இப்படியாமாறி போயிடுவாங்க..

நீ..என் புருஷன் பத்தி..பேச வேண்டாம்..
ஆமா..பெரிய புருஷன்...
பெரிய புருஷன்..தான்..
உனக்கு..தெரியுமா அவன் கல்யாணத்துக்கு முன்னாடி
2 வருஷம் ஒரு பொண்ண..sincere'a..love..பண்ணானு..
அவங்க..வீட்ல ஒத்துக்கல..
அடப்பாவி..ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டானா..
shut up..

கல்யாணத்துக்கு..முன்னாடியே..அவன் என்கிட்ட...
எல்லாத்தையும்..சொல்லிட்டான்...
தெரிஞ்சுமா..கல்யாணம் பண்ணிகிட்ட..
தெரிஞ்சதனால தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்...
என்ன?

என் புருஷன..எத்தனை..நாளா..தெரியும்னு..உனக்கே தெரியும்..
ஆனா செத்து கிடக்கிறானே இந்த நாய்..
எத்தனை வருஷ பழக்கம் சொல்லு..
அவனுக்கு சொல்லனும்னு..எந்த..அவசியமும்..இல்ல..
காலமெல்லாம் சொல்லாம...
என்னை..ஏமாத்தி கூட..இருக்கலாம்..
ஆனா..அவன்..எதையும்..எதையும்..மறைக்கல...

ஆனா என்கூடவே பழகின இந்த நாய்..
எப்படி..எப்படி..மறைக்கலாம் சொல்லு..
எதைஎதையோ..மறைக்காம சொன்னவன்...
இதை..ஏன் மறைக்கனும்...
இதெல்லாம்..கூடவா உன்கிட்ட சொல்லியிருக்கானு..
நீ கூட சொல்லுவ..ஞாபகம் இருக்கா
அப்படிபட்டவன் இதை ஏன் மறைக்கனும்..

அதான் சொன்னோமே..
நீ..மறுத்துடுவியோ..என்கிற பயத்துல தான்....
அப்போ... சொல்லியிருந்தா..ஏத்துக்கிட்டு..இருப்பியா..
அது எனக்கு தெரியாது...
ஆனா..எனக்கு இப்போ இவன பிடிக்கல...
to hell with him and to hell with u people..
எனக்கு இப்படி ஒரு நண்பனே..இல்ல..
எனக்கு..அவன..பிடிக்கல.. பிடிக்கல...பிடிக்கல...
என்று கத்தி கொண்டே..அந்த இடத்தை கடந்தேன்..

நேராக என் வீட்டிற்கு
சென்று கதவை சாத்தி கொண்டு கட்டிலில் சாய்ந்தேன்..
பிடிக்கல ...உன்ன... பிடிக்கல....
ஏன்டா..ஏன்..ஏன்..இப்படி...

schoolல்..ஒரு markல்...
school first 'ஐ miss..பண்ணினப்ப...
நீ..கலங்குவியோ..என்று நான் உன்னை..பார்த்தேன்...
ஆனால் நீ..தைரியமாக தான் இருந்தாய்..

கல்லூரியில்..campus interviewவில்..
just like that miss ஆனப்ப..
நீ..கலங்குவியோ..என்று நான் உன்னை..பார்த்தேன்.
it's all in the game..என்றாய்..

உன் முதல் jobல் நீ select ஆகி...
ஏதோ காரணத்தால் நீ reject ஆகி போனபோது..
நீ..கலங்கிபோவாயோ..என்று உன்னை பார்க்க..
நீ என்னை..சமாதானபடுத்தி..
மேல படிக்கனும் இருக்கு அதான்..சொன்னியேடா...

ஏன்..உன் அப்பாவும் அம்மாவும்..car crashல்...
இறந்த போனபோது கூட..
விக்கி விக்கி.... அழுதது..நான் தான்..
அப்பொழுது கூட.. வருவதும்..போவதும்...
நம்ம..கைல..இல்ல... என்று சொல்லி
தைரியமாக..தானேடா..இருந்தாய்..
எப்பொழுதும்..தைரியமாக..இருந்து..
என்னை..ஆறுதல்படுத்தும் நீ..

எனக்கே தெரியாமல்..எப்போதுடா..கோழை..ஆனாய்..
பிடிக்கவில்லை..

நீ கோழை..ஆனதற்கு..காரணமாகி போன..
இந்த..காதலை..எனக்கு பிடிக்கவில்லை..

நான் அழும் போது எல்லாம் தோள் கொடுத்த என் நண்பனே..
உன்னை..காதலிக்க..வைத்தது..நானா...
ஐயோ..என்னால்...கட்டுபடுத்த முடியவில்லையே..
விக்கி..விக்கி..அழுகிறேன்..சாய்த்து கொள்ள..
நீ இல்லாமல் உன்னை..மரணபடுக்கையில் தள்ளியது..நானா..

பிடிக்கவில்லை...
என்னை... எனக்கு பிடிக்கவில்லை..
என்னை... எனக்கு பிடிக்கவில்லை..



0 Comments:

Post a Comment

<< Home