ஏன் மறந்தாய்....
அப்பப்பா,தலைக்குமேல் வேலை இருக்கு
முதலில்,ஜவுளி
எந்த கடை போகலாம் என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
என்ன கலர்?என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
நகை எந்த கடை என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
எந்த design என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
வளையல்,கம்மல்,நெத்திசுட்டி,நெக்லெஸ்,லொட்டு,லொசுக்கு
ஏன் matching செருப்பு கூட
எது என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
வீட்டுக்கு போனதும்
invitation card select பண்ண
கடை பையன் வந்து இருந்தான்
எந்த card பிடிச்சிருக்கு என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
card உள்ளே print செய்ய
போகின்ற matter,color,pattern
என்ன வேண்டும் என்று நீ கேட்டாய்
நான் சொன்னேன்
எல்லாம் சரி அதிலே மணமகன்.............
என்று எழுதி இருந்த
அந்த மணமகன்
உனக்கு பிடிச்சிருக்கா?
என்று ஏன் கேட்கவில்லை
எல்லாம்... கேட்ட நீ...
இதை ஏன் மறந்தாய்....
0 Comments:
Post a Comment
<< Home