மெளனம்...
மனசு சரியில்லை
உன் கூட... கொஞ்சம் பேசனும்...
என்று நான் சொன்னேன்
எனக்கும் தான்... வெளியில் சென்று பேசலாம்...
என்று நீ சொன்னாய்
சேர்ந்து சென்று ஒரு பாறையில்
அருகருகே அமர்ந்து
மெளனமாக இருந்தோம்...
அங்கிருந்து எழுந்து சென்ற பின்
மனசு... இலேசாகி இருந்தது
பிறகு... நீ சொல்ல நான்
தெரிந்து கொண்டேன்
உனக்கும் தான் என்று....
3 Comments:
அருமை...அருமை...
அடுத்தடுத்த வரவிற்காக ஆவலுடன்...
வாழ்த்துக்கள்!
நன்றி... சிவாஜி அவர்களே..
நன்றி தயா.
Post a Comment
<< Home