...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Saturday, September 23, 2006

தெளிவு

இருவரும் என்னை நேசிக்கிறார்கள்
யாரை ஏற்று கொள்வது
என்று தெரியாமல் தவிக்கிறேன்
என்று கூறினேன்...
தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு
உன் கண்னை இறுக மூடி கொள்
யார் முகம் உனக்கு தெரிகிறதோ
அந்த முகம் தான் உன்னை உண்மையாக
நேசிக்கிறது... என்று நீ சொன்னாய்
நானும் அவ்வாறே செய்து பார்த்தேன்
எனக்கு... தெரிந்தது...
எப்போதும் எதற்காகவும் கண்டிக்காத
என் தந்தையின் முகம்...
அந்த க்ஷணத்திலேயே நான்
முடிவு செய்து விட்டேன்....



0 Comments:

Post a Comment

<< Home