...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Wednesday, October 11, 2006

நீ

என்னுள் புகுந்து
என்னில் கலந்து
ஒன்றோடு ஒன்றாக இணைந்து
உயிரோடு உயிராக பிணைந்து
என் உடல், பொருள், ஆவி
எல்லாம் நீயாக வியாபித்து
அகலகில்லேன் என்று விஸ்வரூபம் எடுத்து
யாதுமாகி நிற்கின்றாய்...



Friday, October 06, 2006

கண்டுகொண்டேன்!

எங்கோ, எப்படியோ, யாருக்காகவோ
யாராவது பிறந்து இருப்பார்களாம்
கேள்விபட்டு இருக்கிறேன்... அவ்வளவே
உனை பார்த்தவுடன்
அது நீ என்று கண்டுகொண்டேன்!



Thursday, October 05, 2006

வித்தியாசம்

பொதுவாக, பேருந்தில் பெண்களுக்காக
ஒதுக்கபட்ட இடத்தில்
ஆண்கள் உட்கார்ந்து இருந்தால்
பெண்கள் அவர்களை எழுப்பி விடுகிறார்கள்
அதுவே, ஆண்களுக்கான இடத்தில்
பெண்கள் உட்கார்ந்து இருந்தால்
அவர்களை ஆண்கள் எழுப்பி நான் பார்த்ததில்லை
ஏன் இந்த வித்தியாசம்?

இத்தனைக்கும் பெண்கள் இடத்தில்
பெண்ணுடன் உட்கார்ந்து இருப்பவர் பொதுவாக
காதலனாக (அ) கணவனாக தான் இருப்பான்
அப்படியிருக்க, அவர்களை எழுப்ப கூடாது
என்ற எண்ணம் ஆண்களுக்கு இருப்பது போல்
ஏன் பெண்களுக்கு இருப்பதில்லை?



என்னுள்

அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள்
நீ இறந்து விட்டாயாம்
ஆனால் எனக்கு மட்டும் அழுகையே வரவில்லை
நீ தான் என்னுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறாயே



Sunday, October 01, 2006

நீ?

என் காலை நீ
என் மாலை நீ

என் பகலும் நீ
என் இரவும் நீ

என் நிழல் நீ
என் நிஜம் நீ

என் நினைவு நீ
என் கனவு நீ

என் வாய்மை நீ
என் பொய்மை நீ

என் சிரிப்பு நீ
என் அழுகை நீ

என் துணிவும் நீ
என் பயமும் நீ

என் இன்பம் நீ
என் துன்பம் நீ

என் சாந்தம் நீ
என் கோபம் நீ

என் பலம் நீ
என் பலவீனம் நீ

யாருடன் நீ ?